Skip to main content

Posts

Showing posts from January, 2022

அரசியலுக்கு அப்பால் பிரதம மந்திரியின் அபார துணிவு

  ஜனத்தொகை மிகுதியாக உள்ள இந்திய தேசத்தில் " கொரானா " பரவாமல் இருப்பின் அதற்கு முக்கிய காரண கர்த்தா நமது பிரதம மந்திரி என்பதில் ஐயமில்லை . துணிவுடன் " ஜனதா ஊரடங்கை " பிரகடனப்படுத்தி செயல்படுத்தியதை ஒவ்வொரு குடிமகனும் மறவான் . நோய் பரவும் சங்கிலியை உடைப்பதற்கு இதைவிட வேறு வழியில்லை . இவ்ஊரடங்கை இன்னும் பத்து நாட்கள் நீட்டித்தால் கிடைக்கும் வெற்றி உலகமே வியக்கும் . அதனை பின்பற்றும் . பாவமறியாத உயிர் காக்கும் வழி இதுவேயாகும் . ஆரம்ப காலத்திலேயே மருத்துவ சம்பந்தப்பட்டவர்களுக்கு ஐந்து நிமிடம் மனதளவில் பாராட்டை அளிக்க வைத்த பிரதம மந்திரியே உம்மை ஒவ்வொரு குடிமகனும் உயிர் உள்ளவரை நன்றியுடன் நினைப்பான் !    ஆயுர்வேதம் , யோகம் இன்னும் பல மருத்துவத்தில் முதலாக திகழும்   பாரதத்தை நோய்த்தடுப்பு முறையிலும் முதலாக திகழ வைக்கிறது இந்த ஜனதா ஊரடங்கு முறை ! Dr S ராகவன்   பேராசிரியர் ( ஓய்வு ) N .I .T. திருச்சி   27, வார்னர்ஸ் ரோடு , கன்டோன்மென்ட் , திருச்சி -620001 தமிழ்நாடு . 9443130663