ஜனத்தொகை மிகுதியாக உள்ள இந்திய தேசத்தில் "கொரானா" பரவாமல் இருப்பின் அதற்கு முக்கிய காரண கர்த்தா நமது பிரதம மந்திரி என்பதில் ஐயமில்லை. துணிவுடன் "ஜனதா ஊரடங்கை" பிரகடனப்படுத்தி செயல்படுத்தியதை ஒவ்வொரு குடிமகனும் மறவான். நோய் பரவும் சங்கிலியை உடைப்பதற்கு இதைவிட வேறு வழியில்லை.
இவ்ஊரடங்கை இன்னும் பத்து நாட்கள் நீட்டித்தால் கிடைக்கும் வெற்றி உலகமே வியக்கும். அதனை பின்பற்றும். பாவமறியாத உயிர் காக்கும் வழி இதுவேயாகும். ஆரம்ப காலத்திலேயே மருத்துவ சம்பந்தப்பட்டவர்களுக்கு ஐந்து நிமிடம் மனதளவில் பாராட்டை அளிக்க வைத்த பிரதம மந்திரியே உம்மை ஒவ்வொரு குடிமகனும் உயிர் உள்ளவரை நன்றியுடன் நினைப்பான்!
ஆயுர்வேதம், யோகம் இன்னும் பல மருத்துவத்தில் முதலாக திகழும் பாரதத்தை நோய்த்தடுப்பு முறையிலும் முதலாக திகழ வைக்கிறது இந்த ஜனதா ஊரடங்கு முறை!
பேராசிரியர் (ஓய்வு) N .I .T. திருச்சி
27, வார்னர்ஸ் ரோடு, கன்டோன்மென்ட், திருச்சி -620001
Comments
Post a Comment